×

சாத்தூர் படந்தால் சந்திப்பில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை

 

சாத்தூர், மே 3: சாத்தூரில் விபத்துக்களை தடுக்க உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தூர் நகரின் மத்திய பகுதியில் மதுரை நாகர்கோவில் நான்குவழிச் சாலை செல்கிறது. நான்குவழிச் சாலையில் நாளுக்கு நாள் வாகனங்களின் போக்குவரத்து அதிகரித்து வருகிறது.

சாத்தூர் நகரில் கிழக்கு பகுதியில் இருந்து மேற்கு பகுதியில் இருக்கும் படந்தால், அண்ணாநகர், குருலிங்காபுரம், பெரியார்நகர், ஆண்டாள்புரம், வெம்பக்கோட்டை, தாயில்பட்டி பகுதிகளுக்கு செல்வதற்கும் அங்கிருந்து சாத்தூர் நகர் பகுதியில் இருக்கும் வட்டாட்சியர் அலுவலகம், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், காய்கறி மார்க்கெட், பள்ளிகளுக்கு வருவோர் படந்தால் சந்திப்பு பகுதி வழியாக நான்கு வழிச்சாலையை கடந்து வரவேண்டியுள்ளது.

சாலையை கடக்கும் இருசக்கர வாகனங்கள், பொதுமக்கள் விரைந்து செல்லும் வாகனங்களில் சிக்கி விபத்து நடந்து அடிக்கடி உயிர்ப்பலி ஏற்பட்டு வருகிறது. ஆகவே விபத்து ஏற்படாமல் இருக்க மதுரை நாகர்கோவில் நான்கு வழிச்சாலை படந்தால் சந்திப்பு பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

The post சாத்தூர் படந்தால் சந்திப்பில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chatur Padandal ,Chatur ,Madurai Nagercoil ,Dinakaran ,
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?